Wednesday, May 21, 2008

நீங்க அழகான பொண்ணா? ஆர்குட்ல, ஃபிளிக்கர்ல இருக்கீங்களா? ஜாக்கிரதை!

லட்டு லட்டா பொண்ணுங்க படத்தைப் போட்டு, ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு ரேட்டையும் போட்டு "வா நன்பா வா"ன்னு சொன்னா நீங்க வராமலா போய்டுவீங்க. அப்படி சில பொண்ணுங்க படத்தைப் பாத்துட்டுதான் ஆசாமி ஒருத்தர் ஆயிரக் கணக்கில் பணத்தைப் பறிகொடுத்திருக்கிறார்.

அதைவிடக் கொடுமை, அந்தப் புகைப்படத்தில் இருப்பது யாரோ சில அப்பாவிப் பெண்கள். அவ்வளவு ஏன்? அவர்கள் நமக்குத் தெரிந்த பெண்களாகக்கூட இருக்கலாம். இனையதளத்தைப் பயன்படுத்தி ஆபாசப்படங்கள், ஆன்லைன் விபச்சாரம் என்று டுபாகூர் ஆசாமிகளின் மாமாக்கள் சேவை சென்னைவரை சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

சென்னையில் இருக்கும் அய்யா ஒருவர் வழக்கமாக தன் யாகூ மெசஞ்சர் சாட்டிங்கில் கடலை போட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அங்கே நுழைந்த ஆசாமி ஒருவன் ‘‘சூப்பர் பிகருங்க இருக்கு. வேணும்னா என்னோட வெப்சைட்டை க்ளிக் பண்ணுங்க’’ன்னு சொல்லி இருக்கிறான். அய்யா அவர்களும் ஆசையாசையாய் அதன் மேல் கையை வைக்க,

‘‘உண்மையான உல்லாசம், பொழுதுபோக்கு, வருமாணம்... ஆகியவற்றின் செக்ஸ் வழிகாட்டி உங்களை வறவேற்கிறது. இது விபச்சாரத்துடன் தொடர்புடைய ஏஜென்சியோ, கிளப்போ அல்ல. செக்ஸ் விஷயத்தில் தங்களுடைய கணவன் மற்றும் பாய் ஃபிரண்டுகளால் திருப்தி அடையாத, யார் தங்களுக்கு முழு திருப்தி தருவார்களோ? என ஏக்கத்தோடு காத்திருக்கும் பணக்காரப் பெண்களைப் பற்றிய தகவல் களஞ்சியம் ஆகும்.

இதில் ஒவ்வொரு பெண்களின் பெயர், வயது, முகவரி, புகைப்படங்கள் மற்றும் சந்திக்கும் போது சொல்ல வேண்டிய சங்கேத வார்த்தைகள் அடங்கியிருக்கும்.
இந்த தகவலைப் பெற நீங்கள் செய்ய வேன்டியதெல்லாம் சிம்பிள். ஆண்டு சந்தா ரூ.10,000. ஆயுள் சந்தா ரூ.15,000. வெளிநாட்டு சந்தா எனில் 500 அமெரிக்க டாலர்கள். இந்த தொகையை ஒரு தடவை மட்டும் கட்டினால் போதும். காலத்துக்கும் நீங்கள் களிப்புறலாம்.

முதல் கட்டமாக எங்களுடைய ஐ,சி.ஐ.சி.ஐ வங்கிக் கணக்கில் ரூ.5000 செலுத்தி பெண்களைப் பற்றிய தகவல்களை இ&மெயில் வழியாக பெறுங்கள். பிறகு நீங்களாச்சு, உங்க செக்ஸ் பார்ட்னராச்சு.

அனைவரும் உயர்ந்த இடத்தில் உள்ள பணக்காரப் பெண்கள் என்பதால் முழு திருப்தி கிடைத்தால் அவர்களே உங்களுக்கு பணம் தருவார்கள். சென்னை, மதுரை, கோவை உட்பட இந்தியாவின் எல்லா மூலையிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் எங்கள் நெட்வொர்க்கில் இருக்கிறார்கள். சேம்பிளுக்கு சிலரை இங்கே கொடுத்திருக்கிறோம். க்ளிக் பண்ணுங்கள், பெண்களோடு ஜாலி பண்ணுங்கள். &இப்படிக்கு விஜய் ரத்தோட், சீஃப் எக்சிகியூட்டிவ் ஆபீசர். தொடர்புக்கு 09892927171 என்று இருந்திருக்கிறது.

படிக்கும் போதே பரவசமான நம்ப பார்ட்டி ‘சென்னை பெண்கள்’ என்று குறிப்பிட்டிருந்த இடத்தைக் க்ளிக் செய்ய அடையார், பெரம்பூர், ஆவடி என்று அழகழகான பெண்கள் வரிகட்டி நின்றிருந்திருக்கிறார்கள். ஆசை ஆசையாய் நம்பரை டயல் செய்து அவனோடு பேசி இருக்கிறார்.

‘‘5000 ரூபாய் கட்ட சொல்றியே! உன்னை எப்படி நம்புவது?’’ என்று கேட்டிருக்கிறார்.

‘யோவ்! நாலு வருஷமா இந்த சேவையை செஞ்சிட்டு வர்றேன். யாரையாவது ஏமாத்தி இருந்தா பீல்டுல நிக்க முடியுமா? நம்பிக்கை தான் முக்கியம். இந்தா 003501527839. இது தான் என்னோட ஐ.சி.ஐ.சி.ஐ அக்கவுண்ட் நம்பர். இதுல அஞ்சாயிரம் ரூபா கட்டிட்டினா பொண்ணுங்க லிஸ்ட் உன்னைத் தேடி வரும். எல்லாரும் ஹை கிளாஸ் எஜுகேடட் கேர்ல்ஸ்பா’’ என்றிருக்கிறான்.

சரி என்று அவனுக்கு பணத்தை அணுப்பிவிட்டு நன்பர் தன் மெயிலை செக் பண்ண விஜய் ரத்தோட்டிடம் இருந்து ஒரு வேர்ட் டாக்குமெண்ட் வந்திருக்கிறது. ‘மாட்டிக்கிச்சு மயிலு’ என்று இவர் ஆர்வமாக திறக்க முயற்சித்த போது அது பாஸ்வேர்ட் கேட்டிருக்கிறது. கடுப்பாகிப் போன நம்ம ஆள், மீண்டும் அவனை செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். அவனோ ‘‘ஆயிரம் பொண்ணுங்களுக்கு மேல லிஸ்ட் கொடுக்கிறேன். வெறும் அய்யாயிரத்துக்கே முடிக்கணும்னா எப்படி? எக்ஸ்ட்ரா ஒரு அஞ்சாயிரம் அனுப்பு’’ என்றிருக்கிறான்.

இப்படியாக ஆசை காட்டி, ஆசை காட்டி நான்கு தவனைகளில் நம்மாளிடம் இருந்து 20 ஆயிரத்தை கறந்துவிட்டான் டுபாகூர் ரத்தோட். அதன் பிறகு செல்போனையும் எடுப்பதில்லை, மெயிலிலும் ரெஸ்பான்ஸ் இல்லை என்றாகிவிட, வகையாக தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறார் பார்ட்டி.

பார்ட்டி நம்பகிட்ட சொல்லுது, ‘‘உலகம் முழுக்க ஒவ்வொரு நகரத்திலேயும் ‘எஸ்கார்ட்ஸ்’ என்கிற ஆன்லைன் பெண்கள் சேவை எந்தக் குறையும் இல்லாமல் நடந்துக்கிட்டுதான் இருக்கு. புதுசா ஒரு இடத்துக்கு டூர் போறவங்க உட்கார்ந்த இடத்தில இருந்தே இன்டர்நெட் மூலமா புக் பண்ணிடுவாங்க. பிறகு நீங்க தங்கி இருக்கிற ஓட்டல், நீங்க எந்த கம்பெனில இருந்து வந்திருக்கிறீங்க? உங்களோட தொழில் என்ன? என்பது போன்ற விபரங்களை உறுதி படுத்திக் கொண்டு பெண்களை சப்ளை பண்ணுவாங்க. பெறும்பாலும் இவர்கள் ஏமாற்றுவது இல்லை.

ஆனால், நான் பணம் கட்டியது ஒரு டுபாகூர் ஆசாமிக்கு. அவனோட ஆன்லைன் ஏரியாவை செக் செய்த போது ‘மகாராஷ்டிரா, மும்பை’ என்று தெரிந்தது. என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் ஏமாந்திருக்காங்களோ? இன்னமும் அவன் ஆன்லைன்லயும், செல்போன்லயும் தொடர்பில்தான் இருக்கான்’’ என்று.

அவர் குறிப்பிட்டிருந்த ‘மை செக்ஸ்கைட்’ என்கிற வெப்சைட்டை க்ளிக்கிய போது அத்தனை தகவல்களும் இடம் பெற்றிருந்ததைக் கண்டேன். சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், புனே, டெல்லி, துபாய் ஆகிய இடங்களைக் குறிப்பிட்டு அழகழகான பெண்களின் புகைப்படங்கள் ஊர், பெயருடன் வெளியாகி இருந்தது.

உடனே யாஹ¨ மெசஞ்சரில் விஜய் ரத்தோட்டை தொடர்பு கொண்டேன். ‘‘பெண்கள் கிடைப்பார்களா? என்று நான் கேட்டதற்கு, முதலில் தன்னுடைய வெப்சைட்டை படித்துவிட்டு செல்போனில் தொடர்புகொள்ளச் சொல்லி பதில் அனுப்பினான். அதை ஓரம்கட்டிவிட்டு நம்மாள் சொன்ன ‘சென்னை எஸ்கார்ட்ஸ்’ஐ டைப் செய்து கூகுல் என்ஜினில் தேடியதில் பல்வேறு வெப்&லிங்க்குகள் வரிசைகட்டி வந்து நின்றன.

சென்னைஎஸ்கார்ட்ஸ்.கொம் என்கிற இனையதளம் ‘‘எங்களிடம் ஏர்ஹோஸ்டஸ், நடிகைகள், ஃபுரொபஷ்னல் ஒர்கிங் லேடீஸ்(டாக்டர், என்ஜினியர் மாதிரி) முதலான உயர்தர பெண்கள் இருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் என்ஜாய் பண்ண ரூ.10ஆயிரம், 20ஆயிரம், 30ஆயிரம் என்று எல்லாமே சீப் ரேட்டு தான். உடனே 9840496334 என்ற எண்ணில் அலிஷாவைத் தொடர்பு கொள்ளவும்’’ என்று கூறிக்கொண்டிருந்தது.

‘சென்னைஎஸ்கார்ட்ஸ்.நெட்’ என்கிற இனைய தளமோ ‘‘காலேஜ் பொண்ணுங்கன்னா பத்தாயிரம், மாடலிங் பெண்கள் ரூ.15ஆயிரம், வேலைக்கு செல்லும் பெண்கள் ரூ.20ஆயிரம், புஃரெபெஷ்னல் பெண்கள் ரூ.20ஆயிரம் என்று பல்வேறு திட்டங்களில் வழங்குகிறோம். கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும். அப்பாயிண்ட்மென்ட் வழியே சென்னையில் 9840486089 என்ற எண்ணிலும், இந்தியாவுக்கு 9819056724 என்ற எண்ணில் சிம்ரனையும் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியது.

இந்த விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி சென்னை சைபர் க்ரைம் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

‘‘இம்மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறோம். ஆனால் பாதிக்கப்படுபவர்கள் வெளியில் சொல்ல அசிங்கப்பட்டுக்கொண்டு புகார் செய்ய முன்வருவதில்லை. விபச்சாரம் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதால் விபச்சரத் தடுப்பு பிரிவுக்கு சென்று கேளுங்கள் என்றார். அதன்படியே விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரிடமும் பேசினேன்.

‘‘எஸ்கார்ட்ஸ் வேண்டுமென்று 20 ஆயிரம் கட்டிய விவகாரத்தில் விபச்சாரம் நடக்கவில்லை, பெண்களும் சம்பந்தப்படவில்லை. அப்படிச் சொல்லி ஒருவன் ஏமாற்றிப் பணம் பறித்திருகிறான் என்பதால் அது சீட்டிங் கேஸ் தான். நிச்சயம் அந்த ஆள் போலி அட்ரஸ் கொடுத்துத் தான் செல்போன் நம்பரையும், பேங்க் அக்கவுண்டையும் வாங்கியிருப்பான். இம்மாதிரியான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது தான் நமக்கு நல்லது.

சென்னையில் எஸ்கார்ட்ஸ் சப்ளை செய்வதாகக் கூறும் இனையதள ஆட்களில் நாண்கு பேரை மடக்கி இருக்கிறோம். தொடர்ந்து அம்மாதிரியான நபர்களை கண்காணித்தபடியே இருப்பதால் சீக்கிரமே அவங்களைப் பிடித்துவிடுவோம்’’ என்றார்.

இனையதளங்களில் தங்கள் அழகான புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்வது இன்றைய பெண்களுக்கு ஒரு பேஷனாகவே இருக்கிறது. இதனால் யாரோ ஒரு டுபாக்கூர் ஆசாமியோ அல்லது ஆபாச வெப்சைட்டுக்களோ பெண்களின் படங்களை காப்பி எடுத்து தவறாக பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. எனவே கொஞ்சம் யோசியுங்க, எச்சரிக்கையாய் இருங்க.

4 comments:

Anonymous said...

இதே ஆள் sms மூலம் கோவையில் ஒருவரைத் தொடர்பு கொண்டு தன் icici அக்கவுண்ட்டில் ரூபாய் 5000 கட்டச் சொல்லியிருகிறார்.

பார்ட்டி போலிசில் சொல்லிவிட்டார் என்று தெரிந்து விட்டதால், ரத்தோட் லைனில் வருவதில்லை.

செல் கம்பெனி, வங்கி போலிஸ் மூவரும் இணைந்து முயன்றால் பிடித்து விடலாம்.

மேல் மட்ட உதவி ஏதாவது இருக்குமோ என்னவோ யார் கண்டா.

Varun said...

இப்போது வருகின்ற phone camera களால் இவ்வாறு படங்களை எடுப்பது சுலபமகின்றது இவர்களுக்கு.
இவ்வாறு பணத்தை கட்டி ஏமாறுவது மிகவும் கவலைக்குரிய விடையம்.

SurveySan said...

//டுபாகூர் ரத்தோட்//

rathod is not the dubakoor here.
the party who went to him is the dubakoor :)

நான் கடவுள் said...

இன்னும்கூட அந்த போலி மாமாப்பய ரத்தோட்டின் செல்போன் நம்பர் 09892927171 செல்பட்டுக்கொண்டேதான் இருக்கு.